தமிழர் நம்மை தட்டி கழிக்கும்..
கைவிட்டு பிழைக்கும்..
அரசியல் அரக்கர்கள் உலாவும் இந்த
அழுகிய நாட்டில்
அரசியல் பழகுடா தமிழா..
உன்னோட சந்ததிய
சக்சஸா வளர்க்க..
சாவகாசமா திழைக்க…
என்னோட பிள்ளையின் உழைப்புதா கேக்குதா..
சோறு போடும் ஆளு அங்க சோந்துபோய் கிடக்குறா..
சோத்துக்கே வழியின்றி தூக்குலயும் தொங்குறா..
அப்ப கூட சும்மாவா விட்டீங்க நீங்க..
புதச்ச சவத்தில
இல்லா குருதிய
குழல் போட்டு உறிஞ்சித்தா குடிக்கிறமாதிரி..
எத்தன டன்னுதான்டா எடுப்பீங்க தண்ணீரு..
(இப்ப மீத்தேன்னு)
கண்ணுல மட்டும் இல்ல..
ஏழ கண்ணுல மட்டும் இல்ல..
உழவன் கண்ணுல மட்டும் இல்ல..
நெஞ்சுலயும் வழியுது கண்ணீரு..
ஊருக்கே ஊட்டிவிட்டு பாத்து பாத்து ரசிச்சவன்..
ஒருபிடி சோத்துக்கு ..
ஒடுங்கி கிடப்பது சாபமா??
சோர்ந்தவன் சோகத்த போக்கிடதானடா..
தேர்தலில் போட்டியும் போட்ட..
வெள்ள சொக்காவில் வந்து ஓட்டும் கேட்ட..
தோழா..
கர்ம வீரனையும் கட்டபொம்மனையும்
கண்ட அந்த நாக்காலி..
நாக்கிருந்தா திட்டிபுடும்..
நாணி குனிஞ்சு
நாலு காலையும் வெட்டிகிரும்..
நல்லவன் நீ அங்க
அமருரது தெரிஞ்சா..
அமரர் ஊர்தியில இடங்கேட்டு அழுகும்..
நாக்கில்லா நாக்காலி அமைதியா இருந்தா..
அர்த்தமிருக்குதடா தோழா..
நாலு எழுத்து படிச்ச நீயும்
நாடு கடந்து போயிட்டா..
வல்லரசு ஆகும்முன்னு..
நல்லரசு ஆகும்முன்னு..
வாழ்க்கையே தேசமுன்னு..
வாழ்ந்த அப்துல் அய்யா கனவுங்கூட..
ஊரு கடந்து..
நாடு கடந்து..
நாளும் கடந்து போயிரும் பாத்துக்க..
தலைவர் தளபதின்னு ஆரம்பிச்ச பிரச்சன..
சின்னம்மா பெரியம்மான்னு செஞ்சதுடா அர்ச்சன..
உரிமைய உரிமையா கேட்டு நின்ன உன்னத்தா..
அந்த நல்லவன் கூட்டம் ..
உன்ன
அந்த நல்லவன் கூட்டம் ..உன்ன
நாவு கூசாம..
நக்சலைட்டுன்னு சொன்னப்போ..
நரம்பு துடிச்சதடா..
நாடகம் புரியலடா..அரசியல் நாடகம் புரியலடா..
தமிழா தண்ணிக்கு கையேந்தி
அடுத்த ஸ்டேட்டுல
வேலைக்கு கையேந்தி
அடுத்த நாட்டுல..
இனி உயிருக்கும் மானத்திற்கும்..
அடுத்த கிரகம் தேடி போகுற நிலமையும் வரலாம்..
ரெடியா இருடா..
பெட்டி படுக்கைய எடுடா..
இந்த உதவா ஆட்டு கூட்டத்திற்கு உழச்சதிற்கு பதிலா..
இஸ்ரோ(ISRO)விற்கு நாலு காசு கொடுத்து வச்சு..
கிரகம் ஒண்ணு பாக்கச்சொல்லு..இந்த கெரகங்கள் இல்லா- நல்ல கிரகம் ஒண்ணு பாக்க சொல்லு..
எல்லாம் தெரிஞ்சும்
எச்ச பணத்திற்காக..
ஒட்டல் சுகத்திற்காக..
எங்கள் அவுங்க வாழ்க ..
எங்கள் இவுங்க வாழ்க ன்னு ..
சால்ரா கொட்டுற ஆசாமிங்க கேளுங்க..
உங்க பேத்தி பேரன் உன்ன மதிக்காது பாருங்க..
குடும்ப அரசியல்
சொத்துகுவிப்பு அரசியல்
ரவுடி கும்பல் அரசியல்
பொம்மலாட்ட அரசியல்
சவுண்டு அரசியல்
சாதி அரசியல்
சுற்றி திரியும் அரசியல்
டிசூம் டிசூம் அரசியல்
அட துடப்ப அரசியல்
இந்த அரசியல்கட்சிகள்-உன்ன காட்சி பொருள் ஆக்கலாம்..
ஒன்னும் பேசா
ஊம பொம்மையா
மாத்தலாம்..
விழித்துக்கொள் தோழா..
கரைபடியா வேட்டிக்கு பின்னே..
புதஞ்சுருக்கும் முகத்த தேடுடா..
கீறிபிழ..
அடையாளம் காண்..
உன் அறியாமை உடைத்தெறி தோழா..
அரசியல் சாக்கடை நாற்றம் நிறைந்ததென ..
விலகி விலகி ..புகழ்
அழுகி அழுகி..
நாட்டையே சாக்கடை ஆக்கும் நிலமையில ..
அடங்கிதான் கிடக்குறோம்..
கேள்வி கேட்கவும் மறுக்குறோம்..
ஜிஎஸ்டி
எண்ணூரு
மித்தேன்னு
மணல் கொள்ள
பண கொள்ள
பெப்ஸி
கோலா
என்னப்பன் விவசாயி தற்கொலை
நீங்க செய்யும் படுகொலை..
இன்னும் நூறு இருக்கு பேச..
இன்னும் நூறு இருக்கு பேச..
பேசுவதோடு அல்ல..உங்களமாதிரி
பேசுவதோடு அல்ல..
நல்லவன் கூட்டத்துக்கும் நமக்கும் நல்ல வித்தியாசம் வேணுமில்ல..
அரசியல் பழகுடா தோழா..
அதுக்காச்சும்
அரசியல் பழகுடா தோழா..
– கவிஞர் . மகிழ்
Gud job Man…..Wrote in a legible manner ……Touching the sensible issues….good command over the language…keep in touch …keep moving….wish you all success …..
Great piece of writing abt d life of Tamil nadu…
LikeLike
படித்தவன் உணர வேண்டிய கருத்துக்கள்…..நன்று..
LikeLike
வாழ்த்துக்கள் நன்றாக இருக்கு பவா, இந்த மாதிரி விழிப்புணர்வு நமது நாட்டிற்கு தேவை பவா .👍👍
LikeLiked by 2 people
Ok pa
LikeLike
தமிழனைத் தலை நிமிர்ந்தும்
பயணத்தில் ……என்றும் உன்னுடன்…..வீழாமல்….
LikeLiked by 1 person
Exact fact…romba nala iruku…idhu elarum therinjuka vendiyadhu..nala velipunarvu…
LikeLiked by 1 person
Inidhu thozhiye!!!
Arumaiyana karuthukal!!!
Indha vilipunarvu ilaiya samudhayathirku migavum mukkiyam!!!
Thangaludaiya indha vetri payanathirku endrum en aadharavum vazhthukalum!!!
LikeLike